இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 24 ஜூன், 2012

துளிப்பா - 4


  • எவ்வளவு நேரம் நிற்பது

         சோளக் கொள்ளையில்

         பொம்மை !



  • கை வலிக்கவில்லையா ?
       
          சாலைச் சந்திப்பில்

          வழி காட்டி மரம்.



  • விற்றுத் தீர்ந்தன மனைகள்
       
          புற்றுக்கு இடந்தேடின
                
          கரையான்கள் !

                                            -  இராதே

சனி, 23 ஜூன், 2012

துளிப்பா - 3

மழைக் காலம்
நேர்முக வர்ணனை
தவளை

                   -  இராதே

வெள்ளி, 22 ஜூன், 2012

துளிப்பா - 2


1
கிளைதோறும் ஊஞ்சல்
தலைக்கீழாய் உலகம்
வௌவால்

2
சுண்டல் பொட்டலம்
சுவையாய் இருந்தது
கவிதை

3
அன்பே சிவம்
காளை மேல்
பரமன்


       -இராதே



செவ்வாய், 19 ஜூன், 2012