இராதே

இராதே
eradevadassou

புதன், 26 ஆகஸ்ட், 2015

அன்னை தெரசா பிள்ளைத் தமிழ் - தால் பருவம்

புல்லின்  நுனியில்  பனிசிரிக்கும்;
          பூவி  னிதழில்  தேன்சிரிக்கும்;
     புரளும்  அலையில்  நுரைசிரிக்கும்;
          புதுநீர்  வரவில்  மீன்சிரிக்கும் !


நெல்லின்  விளைவில்  நிலஞ்சிரிக்கும்;
          நீரின்  மிகையால்  நதிசிரிக்கும்;
     நீளும்  இரவில்  இருள்சிரிக்கும்;
          நிலவின்  உலாவில்  ஒளிச்சிரிக்கும் !


வெள்ளு  டையம்மை  குமின்சிரிப்பில்
          விளைவில்  வறியோர்  வாழ்வுயரும்
     வெற்றிச்  செல்வி  சிரிப்பழகி
          வியனு  லகாளும்  கோமகளே !


எல்லை  இல்லாப்  புன்சிரிப்பே !
          எழிலே ! தாலே தாலேலோ
     இன்பந் ததும்பும் தெரசாவே !
          இமையே ! தாலே தாலேலோ
                                                                               -இராதே