இராதே

இராதே
eradevadassou

திங்கள், 28 நவம்பர், 2022

வெண்பா

 கண்ணின் கருவிழி காமன் பகடையாம்

பெண்டீர் உருட்ட பெருகிடும் - திண்காதல்

பன்னீர் மழையும் பகிருமே இல்வாழ்வில்

இன்பம்  விளையும் இனி


   


சுடரும் விழியால் சுடுவாள் சுவையாய்த்

தொடரும் மொழியால் தொடுவாள் - படரும்

கொடிஇடைப் பாமகளே கொல்லும்நின் பார்வை

அடியால் அளந்தே  னடி 

                                


சிமிட்டா விழிக்குள் சிக்கித் தவிக்க

நிமிட்டும் மனமோ நினைக்க - உமிழ்நீர்

சுரக்கச் சுரக்கச் சுவைபடு காதல்

அரங்கம் பயில அழை


                                     


என்னவளே ! வண்ணயெழில் ஏந்திழையாய் ! வாய்மலர்ந்தே

புன்னகையைப் பூக்கும் புதுமலரே !  - கண்ணெதிரே

கண்கவரும் ஒவியமாய்க் காட்சியொளிர் அன்பனெனை

இன்பமுடன் சேர்வாய் இனி-

 இராதே