இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 ஜூலை, 2012

கண்ணாதாசன் பெருமை !


                                    கண்ணதாசன்  வாழ்க  !                          


உள்ளகத்தில்    ஊற்றெழுந்து    ஊறுகின்ற    வாய்வழித்
துள்ளுகின்ற    பாடலேற்றித்    தூய்மைசெய்    மனத்தினை
அள்ளகின்ற    அற்புதங்கள்     ஆயிரம்     மொழிந்தவன் ;‎
கள்ளவிழ்ந்து   தேன்சுமந்து    காவியம்   படைத்தவன்  !              ( 1 )


முத்தமி   ழெடுத்துவார்த்தை    மோகனம்   இசைத்தவன் ;
சத்துளக்    கவிதைகொண்டு      சந்தங்கள்     வடித்தவன் ;  
தத்துவ    மெருகையேற்றித்     தமிழினைப்   பொழிந்தவன் ;
எத்துறை   நுழைந்தபோதும்     ஏற்றமேற்றம்   ஏற்றமே !             ( 2 )
 

காதலூறும்   சாரமேற்றிக்    கானங்கள்    படித்தவன்  ;
சாதல்மீதும்  பற்றுவைக்கும்  தத்துவம்  உரைத்தவன் ;
மோதலாலே  முன்னும்பின்னும்  முரண்களை  உதிர்த்தவன் ;
வேதகீதம்    பாடிப்பாடி     வேள்விகள்    வளர்த்தவன்  !            ( 3 )


மெட்டினிற்கே  ஏற்றபாடல்  மேன்மையைத்   தொடுத்தவன் ;
கட்டளைக்  கிணங்கிவண்ணக்  கருத்துகள்   விதைத்தவன் ;
பட்டஇன்ப   துன்பமெல்லாம்   பாடலில்    புனைந்தவன் ;
கொட்டுகின்ற   அருவிபோலக்  கொடுத்தபாக்கள்  ஆயிரம் !        ( 4 )


மின்னிமின்னி  மேலெழும்பும்   மெய்சிலிர்க்கும்   வரிகளால்
எண்ணியெண்ணிச்   சீரமைந்த  எண்ணமென்னும்  விழிகளால்
உண்ணஉண்ணக்   கவிதைதந்த   உயர்ந்தவர்   வழியிலே
தன்னினைவில்   லாமலென்னைத்   தந்தவிட்டேன்   கவியிலே !     ( 5 )


கண்ணைமூடிக்   கற்பனைத்தேன்    கவிதைசொட்ட   தந்தவன் ;
விண்ணைமுட்டும்    புகழினுச்சில்    விழுமியம்   அடைந்தவன் ;
எண்ணிலாத    விருதுவெற்றி    இடைவிடாது   பெற்றவன் ;
கண்ணதாசன்    பெருமையென்றும்   கோடிகோடி   கோடியே !      ( 6 )
                                                                                         - இராதே



1 கருத்து: