இராதே

இராதே
eradevadassou

சனி, 25 மே, 2013

இன்னும் நீ . . .

                                                        

   

மறந்து விடாதே
மானிடனே !

எச்சங்களை
ருசித்துக்கொண்டு
உச்சங்களை
அடையாமல்
மிச்சத்தில் தான்
இன்னும் நீ ...

மூச்சுத் திணறலில்
மூழ்கடிக்க வைக்கும்
முற்றிய  சாதிமையிருட்டால்
மூடிய அறையில் தான்
இன்னும் நீ ...

மதமாச்சர்யங்கள்
மூட்டியிருக்கும்
மூட்ட இருக்கத்தில் தான்
இன்னும் நீ ...

சாதி சாக்கடையில்
சல்லாபிக்கும்
புழுக்களாய்
புழுத்து கிடக்கிறாய்
இன்னும் நீ ...

வாய் கிழிய
சத்தமிடும்
வறட்டு தவளையாய்
கிணற்றுள் கிடக்கிறாய்
இன்னும் நீ ...
                                                    -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக