இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 17 ஜூலை, 2026

இறால்


 இறால் !


முறுக்கு மீசை இறாலின்

    முன்னே நீளும் முள்ளுண்டே ;

குறுக்கும் நடக்கும் அசைந்திட

    கூர்ந்த கொம்பும் உணர்த்துமே ;

துறுத்தும் கூட்டுக் கண்களால்

    துழவித் துருவி நகருமே ;

சறுக்கி நீந்தித் திரிந்துமே

    தரையில் நடக்கக் காலுண்டே !



கூடும் கெட்டக் கொழுப்பினைக்

    கெடுத்தும் இதயம் காக்கவும்

வாடும் மூளை சுறுசுறுப்பை

    வழங்கும் புரதம் , எதிர்ப்பாற்றல்

தேடும் பார்வை சிக்கல்கள்

    தீர்த்தே கண்கள் மேம்படவும்

ஈடு கொடுக்கும் சத்துகள்

    ஈனும் உயிரி இறாலே !



நஞ்சு நரம்பு நீக்கியே

    நன்கு சமைத்து சுவைக்கலாம் ;

கொஞ்சம் அளவே தின்பதால் 

    கொழுப்பும் அரிப்பும் அண்டாதே ;

அஞ்சி டாமல் உண்ணுங்கள்

    அழகாய் உடலைப் பேணுங்கள் ;

வஞ்ச மில்லாக் கடலுணவை

    வாரி கொடுக்கும் இறாலே !


 - பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக