நம்புடா !
பூமேனிப் பொன்பட்டே
கண்ணுறங்கு !
புதுவானில் விடிவெள்ளி
கண்ணுறங்கு !
தாலாட்டுப் பாடநான்
தாயில்லையே ;
நீலாம்பரிப் பாடத்
தெரியலையே !
நீலாம்பரிப் பாடத்
தெரியலையே !
( பூமேனி )
பூங்காற்றும் உரசாதப்
புல்லாங்குழல் ;
புதுமேகம் தூறிய
மழையின்துளி ;
மங்காத ஒளிவீசும்
மஞ்சள் நிலா ;
மாடத்துள் திகைக்கிற
வெள்ளை புறா !
மாடத்துள் திகைக்கிற
வெள்ளை புறா ( பூமேனி ) - 1
ஊருக்குள் யார்யாரோ
புறம்பேசுவார் ;
உதவாதக் கதைக்கெல்லாம்
உனையேசுவார் ;
பேருக்கே பொய்யான
பாசம் வைப்பார் ;
பேசுறப் பேச்சாளே
முள்ளாய்த் தைப்பார் !
பேசுறப் பேச்சாளே
முள்ளாய்த் தைப்பார் !
( பூமேனி ) - 2
துயரந்தான் முன்வாசல்
திறந்தே வரும் ;
தோதாகக் காதலும்
பிறந்தே வரும் ;
துரோகங்கள் நண்பர்கள்
தயவால் வரும் ;
தீராதத் தொல்லைகள்
தானா வரும் !
தீராதத் தொல்லைகள்
தானா வரும் !
( பூமேனி ) - 3
எல்லாமும் சந்திப்பாய்
பின் நாளிலே ;
இப்பவே சொல்றேன் நான்
தெளிவாகனும் ;
வெல்வது எதிர்நின்று
விடும் அம்புடா ;
வெற்றிதான் உனைசேரும்
நீ நம்புடா !
வெற்றிதான் உனைசேரும்
நீ நம்புடா ! ( பூமேனி ) - 4
- பொறிஞர் இராதே