இராதே

இராதே
eradevadassou

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்கல்

வானில்  எழுங்கதிரை  - புவி
ஊனில்  விழுங்கதிரை
கூனி  லாப்புகழ்  போற்றி  மகிழ்ந்திட
வந்திடுமே  பொங்கல் - ஒளி
தந்திடுமே   பொங்கல் !


தேரில்   வருங்கதிரை - இப்
பாரில்   எழுங்கதிரை
ஊரி   னிலேவர   வேற்று   மகிழ்ந்திட
வந்திடுமே  பொங்கல் - சுடர்
தந்திடுமே   பொங்கல் !


ஓடி   வருங்குதிரை - அதில்
ஆடி   வருங்கதிரை
பாடிக்   குளிர்ந்திடக்   கோடிக்   குரல்ஒலி
தந்திடுமே  பொங்கல் - கதிர்
வந்திடுமே   பொங்கல் !


மேற்கில்   விழுங்கதிரை - நால்
திக்கில்   ஓளிர்கதிரை
நெற்களங்   கள்நிறை   பொற்குவி   யல்பெற
பொங்கிடுமே   பொங்கல் - பால்
பொங்கிடுமே   பொங்கல் !


வாடுந்   தமிழினத்தை - துயர்
சூடுந்    தமிழினத்தை
கேடும்   விட்டிட   பாடும்   பணியென
வந்திடுமே  பொங்கல் - சுவைத்
 தந்திடுமே   பொங்கல் !
                                                                                  -இராதே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக