இராதே

இராதே
eradevadassou

சனி, 6 பிப்ரவரி, 2016

வா மயிலே

கண்களினால்  கடத்தினாள்
     காதலாலே  படுத்தினாள்
          காமனுடை  உடுத்தினாள்
               கனவுகளில்  துரத்தினாள் !


வண்ணப் பா   கொலுசழகி
     வளைகொஞ்சும்  இசையழகி
          மணிமுத்துப்  பல்லழகி
               மறுதோன்றி   இடையழகி !


சின்னயிதழ்ச்  சுவையுண்டு
     சிணுங்கல்கள்  பலவுண்டு
          சிலுமிசங்கள்  துணைகொண்டு
               சேர்ந்தணைக்கும்  அழகுண்டு !


மன்மதவில்  புருவத்தாள்
     மயக்குமெழில்  உருவத்தாள்
          மனங்கிளறும்  பருவத்தாள்
               மாதுளம்பூ  நிறமொத்தாள் !


கெண்டைமீன்  கண்ணழகி
     கெம்பு நிற  இதழழகி
          கிள்ளைமொழிச்  சொல்லழகி
               கிறங்கவைக்கும்  மெய்யழகி !


சின்னவிழிப்  பார்வையிலே
     சிரிப்பழகுப்  போர்வையிலே
          செந்தமிழின்  சேர்க்கையிலே
               சேர்ந்துவாழ  வா மயிலே !
                                                                       -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக