இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

, இயைபுத் துளிப்பா - ( லிமரைக்கூ ) - 2

நூலகம்  படிக்கச்  செல்
நூல்பல  கற்று  நுண்ணறிவோடு
நல்லதை  ஊருக்குச்  சொல்


செய்வோம்  விழிக் கொடை
செகத்தை  விழியிலார்  இருவர்
காணத்  திறக்கும்  நடை


உயிர்  உலாவும்  வீடு
ஊதிப்புகை  தள்ளப் புற்றாய்
மாறும்  எலும்புக்  கூடு 


அடுப்பில்  தூங்கும்  பூனை
அடிவரைச்  சுரண்டியும்  ஏழைவீட்டில்
அரிசி  இல்லாப்  பானை


சாலை விதிகளை  மதி
சிட்டெனப்  பறந்துச்  சட்டென  விரைவது
மரணம் அடையும்  கதி

                                                                                                    இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக