இராதே

இராதே
eradevadassou

சனி, 5 ஆகஸ்ட், 2017

இயற்கை விளையாட்டு

இயற்கையிடம்  விளையாடாதே !  - உன்
இறுதிமூச்சு  நின்றேவிடும் !
இயற்கை வளம்  நீ சுரண்டாதே !  - அது
இயல்பு நிலையைக்  கொன்றேவிடும் !                                               (இயற்கை)



மழைவெள்ளம்  வீடுகளில்  சூழ்ந்துநின்றது ;
பிழைசெய்த  மனிதர்களின்  தவறு  சொன்னது ;
இழைந்தோடும்  சோகத்தினை  எடுத்து  சொன்னது ;
பிழைப்புநடத்தி  ஏய்க்கும்மனித  குணத்தைச்  சொன்னது !        (இயற்கை)




தினம்தினம்  நீரின்வழி  அடைக்கும்  மாந்தரே
பிணம்மிதக்கும்  சூழ்நிலையை  உணர்ந்து  பாருங்கள் !
பணம்பெருக்க  நிலம்விற்ற  வணிக  மாந்தரே
மனந்திருந்தும்  வழிகண்டு  வாழப்  பழகுங்கள் !                             (இயற்கை)




குளம்குட்டை  ஏரிகளில்  வீடு  கட்டினீர் ;
குதித்தோடும்  நீர்நிலையை  ஒழித்துக்  கட்டினீர் ;
படுபாத  கங்கள்செய்ய  வரிந்து  கட்டினீர் ;
பாழுந்தன்ன  லத்தினிற்கே  கோயில்  கட்டினீர் !                                   (இயற்கை)




வயலைவிற்றுப்   பணத்தைவைத்தே  உணவு  தேடுறார் ;
வயலிலாது  விளையும்பயிரும்  உலகில்  உள்ளதோ ?
முயன்றுமுயன்று  பணத்தைத்தின்றால்  பசியும்  போகுமா ?
வயலும் வாழ்வும் இயற்கை தந்த  பரிசு  தானன்றோ ?                 (இயற்கை)


                                                                                                                           - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக