இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 19 ஜூலை, 2026

நல்லதைச் சொன்னேன்!

 நல்லதைச் சொன்னேன் !


ஊருக்குநான் நல்லதைச் சொன்னேன்

   உள்ளதைநான் உரக்கச் சொன்னேன் ;

பேருக்குத்தான் கேட்டு வைச்சாங்க;

   பேசும்வாயைப் பூட்டி வைச்சாங்க !      ( ஊருக்கு)


ஊருக்குள்ளே கேட்கணுமாம்

   உண்மைதனைச் சொல்வதற்கு ?

யாரையெண்ணிப் பார்க்கணுமாம்

    உள்ளக்கதை சொல்வதற்கு ?    ( ஊருக்கு )


நெல்லுக் குள்ளே சோறிருக்கும்

நெஞ்சிக் குள்ளே நஞ்சுமிருக்கும்

வஞ்சத்தைத் தான் மறைச்சி வைச்சா

வாழ்வில் லென்ன மிஞ்சியிருக்கும் ?   ( ஊருக்கு ) 1


ஆணுக் குள்ளே பெண்ணிருக்கா

பெண்ணுக் குள்ளே ஆணிருக்கான்

பூத்தாடும் உறவுக் குள்ளே 

பூடகமாய்ப் பகையிருக்கே ?   ( ஊருக்கு ) 2 


நட்புக் குள்ளே கற்பிருக்கே

கற்பு யெனும் நெருப்பிருக்கே

உறவாடி அதை அணைச்சா

உள்ளுக் குள்ளே வலியிருக்கே ?   ( ஊருக்கு ) 3


கண்ணுக் குள்ளே நீருரிக்கே

கட்டி அழ யாரிருக்கா ?

மண்ணுக் குள்ளே போகுமுன்னே

மானஞ் சொல்லும் வாழ்விருக்கே !   ( ஊருக்கு ) 4


உனக்குள்ளே மானமிருக்கே

உணர்ந்தெழ ஞானமிருக்கே

நடந்த தெண்ணி வருந்திக்கணும்

நாளும் நம்மைத் திருத்திக்கணும் !   ( ஊருக்கு ) 5


 - பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக