இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 26 மே, 2013

ஆசைகள்

தெளிந்த நீரோடையாய்
பயணப்படும் எண்ணங்களில்
நிரம்பி வழிகின்றன
அணையிடும்
ஆசைகள் !

கனவுகளால்
காயப்பட்டே
ஆசைகளோடு
சலனப்பட்டுக்கிடக்கிறது
மனசு !

எச்சில் ஊறும்
இனிப்பகள்
மறக்கடிக்கப்பட்ட
நாக்கு !

காரங்களுக்கும்
புளிப்புகளுக்கும்
கடிவாளம் இடும்
வாய் !

உப்பில்லாப் பண்டங்கள்
உட்செல்லும்
குப்பைத்தொட்டி
வயிறு !

காணக்கிடைக்கும்
தின்பண்டங்களைத்
தின்பதற்கில்லா
ஏக்கத்தில்
வயசு !

மருத்துவத்தில் வாழ்வு
நடத்த செபிக்கும்
மூளை !

உப்புச் சப்பில்லா
உயிரைப் பிடித்து
வைத்து கொள்ளும்
போராட்டத்தில்
ஆசைகளால்
களவாடப்படுகிறது
வாழ்க்கை !
                                            -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக