இராதே

இராதே
eradevadassou

வியாழன், 26 டிசம்பர், 2013

தோழர் நல்லகண்ணு - சிறுதேர் பருவம்

ஏங்கல்  மார்க்சின் தத்துவங்கள்
               எடுத்தாட்  கொண்ட  நுண்மானே !
     ஏழை  எளியோர்  குறைகேட்டே
               எழுந்த  புரட்சிப்  புதுப்புயலே !


தாங்கல்  கொண்ட  நீர்நிலைகள்
               தழைக்க  வேண்டி  தயங்காமல்
     தன்ன  லமின்றிக்  குரல்கொடுத்த
               தனியா  ஆர்வப்  பேரூற்றே !


நாங்கள்  இங்கே  இருக்கின்றோம்
               நடுங்க  வேண்டாம்  ஏழையரே
     நலமே  சொல்லும்  பொதுவுடைமை
               நண்ணும்  கட்சித்  தலைமகனே !


தேங்கல்  இல்லாத்  தெளிவுடனே
               தீயோர்  வன்மம்  ஒழித்தவரே !
     திடமே ! நேர்மை  நல்லகண்ணே
               துணையே ! சிறுதேர்  நடத்துகவே !
                                                                          -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக