இராதே

இராதே
eradevadassou

புதன், 25 டிசம்பர், 2013

தோழர் நல்லகண்ணு - சிற்றில் பருவம்

கூழாங்  கற்கள்  உருண்டோடிக்
          குவிக்கும்  மணலை  நதிகரையில்
     கோணல்  மதியார்  நரித்தனத்தால்
          கொள்ளை  யடித்தார்  மணற்பரப்பை


பாழாய்  ஆக்கி  மண்வளத்தைப்
          பறிக்கும்  கும்பல்  வெறித்தனத்தைப்
     பரிதி  சுடராய்ச்  சுட்டெரித்த
          பகலே ! மாணிக்க  மணித்திரளே !


வீழாப்  பொருளே ! வெண்முத்தே !
          விடிவாய்ப்  பொழியும்  மாமழையே !
     விளையுங்  கதிரே ! அரிவாளே !
          விழையும்  ஏழைக்  கொருமருந்தே !


தோழா  தோழர்  பெருந்தகையே !
          தூயா  சிற்றில்  சிதையேலே !
     துள்ளும்  பொருநை  நதிகாத்தோய் !
         துறைவா  சிற்றில்  சிதையேலே !
                                                                           _ இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக