இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 15 ஜூன், 2014

நிறப்பிரிகை

வெள்ளொளியாய்
ஊடுருவி
வெவ்வேறாய்  விரிந்து
ஏழொளியாய்
மருவிச்  சிதைந்து
வெளிப்படுததில்
விலகிச்சென்றாலும்
விரும்பி  வந்து
பூசிச் சிரிக்கின்றன
நிறங்கள். . . .



கறுப்பும் வெளுப்புமாய்
நீலமும் மஞ்சலுமாய்
காவியும் பச்சையுமாய்
மாறி மாறி
சிலிர்க்கின்றன
பச்சோந்தியாய் . . .



மௌனங்கள்
பிய்த்துதிர
குழப்பங்களின்
வித்தாய்
அடையாளமிடும்
நிறங்களின்
புன்னகை


அவரவர்  பார்வையில்
பிரியும்  நிறமாய்
நான் !
                                                     இராதே 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக