இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 15 ஜூன், 2014

தூவல் முள்

என் தூவலின்
கவிழ்ந்த முள்ளில்
கலங்கி  வழிகிறது
கவிதை


கனக்கும்  இதயத்தின்
வலிக்கும்  வார்த்தைகள்
வசப்படாமல்
திக்குமுக்காடி
திணறி  கிறுக்குகிறது
தூவல்  முள்


படிப்பதற்குள்
கசங்கி
பந்துகளாய்
உருண்டோடி
குப்பைக்  கூடைகளில்
தஞ்சம்  புகும்
தாள்களின் புலம்பலில்
தவித்திடும்
செவிகள்


உள்ளும்  வெளியுமாய்
ஓடோடி  கனைக்கும்
எண்ணக் குதிரைகளின்
கடிவாளம்
கைவரப்பெறாமல்
தத்தளிப்பில்  சுழலும்
கணங்களில்
காணாமல் போய்விடும்
மகிழ்வு


இறுதித்  தீர்ப்பின்  பின்
ஒடிபடும்  தூவல் முள்
முன்பாகவே
ஒடிகிறது
அவசரத்தில் . . .
                                                -இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக