இராதே

இராதே
eradevadassou

வியாழன், 25 டிசம்பர், 2014

தோழர் நல்லகண்ணு -சிறுதேர் பருவம்

திங்கள்  பிறையே !  திருத்தேரே  !
               துவளு  முழவர்க்  காப்பகமே !
     தெருவி  லிறங்கிப்  போராடித்
               திருயே  ருழவர்  கடன்தீர்த்தாய் !



மங்கா  ஒளியே !  மரிக்கடலே !
               மதிப்பில்  மிளிர்ந்த  மணிமுத்தே !
     மயங்கா  மனமே !  அதிதீரா !
               மண்டும்  வைர  பேரொளியே !



சங்காய்  முழங்கித்  தொழிலாளர்த்
               தடைகள்  தகர்த்த  தனிவீரா !
     சகடம்  போலே  உழைக்கின்ற
               தன்னி  கரில்லா  பெருந்தலைவா !



எங்கு  மெழுச்சிப்  புயலாகி
               எளியோர்  வாழ்வைக்  காப்பவனே !
     எளிமை  குன்றே !  நல்லகண்ணே !
               எழுந்து  தடந்தேர்  உருட்டகவே !

                                                                                           -இராதே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக