இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 26 டிசம்பர், 2014

தோழர் நல்லகண்ணு பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம்

வேய்ந்த  ஓலைக்  கூரையுமே
               வேண்டு  மளவு  கிழிந்திருக்கும் ;
     வேகா  அடுப்பில்  பூனையுமே
               விரும்பி  யுறங்கிப்  படுத்திருக்கும் !



பாய்ந்த  வறுமை  செழித்திருக்கும் ;
               பருவ  மழையும்  பொய்த்திடவே
     பசுமை  யில்லாப்  பயிரிருக்கும் ;
               பட்டி  னிச் 'சா '  நிறைந்திருக்கும் !



காய்ந்த  தலையில்  பிசுக்கிருக்கும் ;
               கண்ணில்  குழியும்  விழுந்திருக்கும் ;
     கடனில்  வீடு  மிதந்திருக்கும் ;
               கருகும்  உழவர்  நிலையிதுவே !



தோய்ந்து  தொடர்ந்து  போராடித்
               துவண்ட  உழவர்  கடன்மீட்ட
     தோழர்  தோழா  நல்லகண்ணே
               தொடரக்  கொட்டுக  சப்பாணி !

                                                                                    -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக