இராதே

இராதே
eradevadassou

புதன், 2 நவம்பர், 2016

துளிப்பா - 47

கிழிந்த வானம் 
தைக்கிறது
மின்னல்



காது குத்தல்
கதறுகிறது
ஆட்டுக் கடா



மலர்த் தாவும்
வண்டுகள்
மகரந்த கடத்தல்



மனத்தில் ஆடுகிறது
மாற்றான் தோட்டத்து
மாங்கனி



கடை ஏறுகிறது
தாலிக்கொடி
வறுமை

                                             -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக