இராதே

இராதே
eradevadassou

சனி, 3 அக்டோபர், 2020

                        நிலவு

( காவடிச் சிந்து )
( பாதி ராத்திரி வீட்டு மெட்டு )

நீல வானத்தில் மாலை யில்வந்து
நின்றி டும்வெள்ளித் தட்டு - மஞ்சு
நெற்றி யில்இட்டப் பொட்டு - மின்னல்
நீச்ச லில்ஒளிர் வட்டு - ஒளி
நீட்டிக் கூட்டிக்கொண் டேகி டநீரில்
நெகிழுதே அல்லி மொட்டு !

கால மும் இர வோடு தான்உன்னை
காண்ப தேகளிப் பாகும் - காளை,
கன்னி யர்மனம் நோகும் - உந்தன்
கருணை யால்இடர் போகும் - கவி
கற்ற பாவலர் கற்ப னைக்கும்உன்
காட்சி யேபரி சாகும் !

தேனி லாவிலே காத லார்மனம்
செம்மை யாயின்பம் ஊட்டும் - இணை
தீதி லாச்சுவை கூட்டும் - மகிழ்
சிந்து பாவியம் தீட்டும் - மெல்ல
தேயு றும்பிறழ் உள்ளத் தீச்சலை
செப்ப மாய் அற ஓட்டும் !

வானி யங்கிடும் வெண்ணி லாவந்து
வருட வேகுளிர் வீசும் - நோக்க
வாட்ட மாய்க்கண்கள் கூசும் - கேட்க
வண்ட மிழ்மொழி பேசும் - கலை
மாற்றத் தால்வரு மேற்ற தாழ்வுகள்
மாற வே போகும் மாசும் !

தேய்ந்தி ளைத்துநீ நாள்வளர் பிறை
தேர்ந்த கோளுறு காலம் - புவி
சேர்ந்த ஓட்ட 'மாய் மாலம்' -- அந்தி
தீண்ட லில்இடும் ஆலம் - வெய்யோன்
சிந்தி டும்ஒளி இந்து மேவிட
சீர்பெ றும்அருங் கோலம் !

பாய்ந்தெ ழுங்கடல் ஓய்ந்தி டும்அலை
பாரி னில்உந்தன் ஆர்ப்பு - விசை
பரவ லில்வரும் ஈர்ப்பு - ஓதம்
பங்கி டும்விளை யாட்டி னால்நிகழ்
பாரு றும்வினை வார்ப்பு !

பூமி யைச்சுழல் மைய மாய்க்கொண்டுப்
பொற்பு றுந் துணைக் கோளாம் ! - பிறை
போலு ரு அரி வாளாம் - வான்
பூ நி லாக்குறை சூளாம் - மதி
பூர ணவடி வாகி டும்நிலை
பூணு தல்திரு நாளாம் !

பாம ரர்க்கல் லல்தந்தி டும்பகல்
பைச லாகும்'மை' காட்டில் - எழும்
பால்நி லாஒளி நாட்டில் - சுடர்
பாய்ச்சி டுங்குடி வீட்டில் - வடை
பாட்டி சுட்டிடுங் காட்சித் தோன்றலோ
பார்வை மாயம்கண் கூட்டில் ?
- இராதே
சூள் : சாபம் , பொற்பு : அழகு
Image may contain: sky and cloud




              



You, Viramany



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக