இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

சொல்லு ! சொல்லு !


 சொல்லு ! சொல்லு !


சொல்லு ! சொல்லு !

    சொல்லு ! சொல்லு !

      உண்மையைச் சொல்லு !

      உண்மையைச் சொல்லு !     ( சொல்லு )


சொல்லுறது வலிக்குமா ?

      சோகத்தைத்தான் திணிக்குமா ?

நல்லதையும் கெட்டதையும்

      நாடறிந்த மொத்தத்தையும்    ( சொல்லு )


புத்தனா ? இல்லை சித்தனா ?

முத்திப்போன பித்தனா ?

எத்தனையோ கதையிருக்கே

எந்த கதையைச் சொல்லுறது !   ( சொல்லு ) - 1


பூவுக் குள்ளே தேனிருக்கும்

பூநாகம் மறைஞ்சிருக்கும்

நாவுக் குள்ளே சொல்லிருக்கும்

நஞ்சுந் தேனும் கலந்திருக்கும் !   ( சொல்லு ) - 2


கண்ணுக் குள்ளே பெண்ணிருக்கும்

பெண்ணு மேலே கண்ணிருக்கும்

ஒன்னுக் குள்ளே ஒன்னிருக்கும்

உரசிப் பாரு பொய்யிருக்கும் !  ( சொல்லு ) - 3


பாம்பைப் போலே சீறுறான் 

பணத்தைப் பார்த்து மாறுறான்

பல்லிளிச்சி வால் பிடிச்சுப்

பதவி சுகங் காணுறான் !    ( சொல்லு ) - 4


பானைக் குள்ளே யானையா ?

பதுங்கி நிக்கும் பூனையா ?

உள்ளக்  குள்ளே ஞானமா ?

ஓங்கி நிக்கும் ஊனமா ?    ( சொல்லு ) - 5


 - பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக