இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

நம்புடா

 நம்புடா !


பூமேனிப் பொன்பட்டே

      கண்ணுறங்கு !

புதுவானில் விடிவெள்ளி

      கண்ணுறங்கு !

தாலாட்டுப் பாடநான்

      தாயில்லையே ;

நீலாம்பரிப் பாடத்

      தெரியலையே !  

நீலாம்பரிப் பாடத்

      தெரியலையே !  

( பூமேனி )



பூங்காற்றும் உரசாதப்

      புல்லாங்குழல் ;

புதுமேகம் தூறிய

      மழையின்துளி ;

மங்காத ஒளிவீசும்

      மஞ்சள் நிலா ;

மாடத்துள் திகைக்கிற

      வெள்ளை புறா !   

மாடத்துள் திகைக்கிற

      வெள்ளை புறா     ( பூமேனி ) - 1



ஊருக்குள் யார்யாரோ

      புறம்பேசுவார் ;

உதவாதக் கதைக்கெல்லாம்

      உனையேசுவார் ;

பேருக்கே பொய்யான

      பாசம் வைப்பார் ;

பேசுறப் பேச்சாளே

      முள்ளாய்த் தைப்பார் ! 

பேசுறப் பேச்சாளே

      முள்ளாய்த் தைப்பார் ! 

   ( பூமேனி ) - 2



துயரந்தான் முன்வாசல்

      திறந்தே வரும் ;

தோதாகக் காதலும்

      பிறந்தே வரும் ;

துரோகங்கள் நண்பர்கள்

      தயவால் வரும் ;

தீராதத் தொல்லைகள்

      தானா வரும் ! 

தீராதத் தொல்லைகள்

      தானா வரும் ! 

   ( பூமேனி ) - 3



எல்லாமும் சந்திப்பாய்

      பின் நாளிலே  ;

இப்பவே சொல்றேன் நான்

       தெளிவாகனும் ;

வெல்வது எதிர்நின்று

      விடும் அம்புடா ;

வெற்றிதான் உனைசேரும்

      நீ நம்புடா !

 வெற்றிதான் உனைசேரும்

      நீ நம்புடா !  ( பூமேனி ) - 4



- பொறிஞர் இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக