இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

மனமா இது மனமா ?

 மனமா இது மனமா ?


மனமா இது ? மனமா இது ?

     இது மனமா ?

மாறி மாறி அழவதில் தான்

      தனி சுகமா ?    ( மனமா )




மௌனப் பாயை விரிச்சுப் போட்டும்

          தூக்கம் காணலையே !

மாயக் கடலில் நீந்தி நீந்திக்

          கரையச் சேரலையே !    ( மனமா )




ஆசை சூறைக் காத்து வீசி

          மனசைக் கலைப்பதும் ;

ஆடி ஆட்டம் போட்ட உடம்பும்

          அடங்கிக் கிடப்பதும் ;

ஓசை  யின்றி ஒன்னு ஒன்னா

          ஒதுங்கிப் பிரிவதும் ;

உரசிப் பார்க்கும் காலம் செய்யும்

          கோலந் தானிது !    ( மனமா ) - 1



பணமும் சொத்தும் நாளும் நம்மை

          சேர விடாது ;

பாச வலையில் துள்ளும் மீன்கள் 

          விடிவு பெறாது ;

இணக்க மில்லாப் பிணக்கு வாழ்வில்

          சோகந் தீராது ;

இறக்கும் முன்னே எத்தனை தான்

          மாய ஜாலமோ ?     ( மனமா ) - 2



உடலுக் குள்ளே இருக்கும் உயிரு

          பறக்க நினைப்பதும் ;

உருகும் சொந்த பந்தம் இன்னும்

          இழுத்துப் பிடிப்பதும் ;

முறுக்குத் திமிரு பற்று விலக

          மறுக்கும் முயல்வதும் ;

முடிய போகும் கதையின் உச்சக்

          காட்சி அல்லவா ?    ( மனமா ) - 3


 - பொறிஞர் இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக