இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

காலம் !

 காலம் சுத்துற வேகம் பாரு

     கண்ணுக்கு முன்னாலே !

கடந்து வந்த பாதை பாரு

     சொல்லுக்கு பின்னாலே !    




உலகஞ் சுத்துறச் சுத்துல தானே

     உளறுந் தத்துவம் புரியும் ;

கலகம், குழப்பம் வந்தா தானே

     வாழும் வாழ்க்கைத் தெளியும் !    




சிங்கம், புலியும் சிரிச்சிப் பழகிக்

    கவிழ்த்து விடாது ;

பங்குக் கேட்டு நைசாப் பேசிக்

   கழட்டி விடாது ;

பொங்கும் பாசம் நேசம் ஊட்டித்

   தெருவில் விடாது ;

திங்குஞ் சோத்தில் விஷத்தை வைச்சித்

   தீர்த்துக் கட்டாது !    



காத்தும் மழையும் வெயிலும் அடிக்கக்

   காசுக் கேக்கலையே ;

காயும் பழமும் பயிரும் விளைய

  ' மாமூல்' கேக்கலையே ;

பூவு சிந்துந் தேனுக் கெங்க

   வட்டிக் கேக்குது ;

புரிஞ்சிக் கிட்டா மனுசன் தேறப்

   புத்தி கிடைக்குது !    



ஓடும் ஆறும் நீரும் பெருகி

   உசிரக் காக்குது ;

உறைஞ்சி போன மறுத்த மனசு

   ஊரைக் கெடுக்குது ;

பாடு படற எண்ணங் கூடப்

   பறந்து போனது ;

பார்த்த காலம் மனுசன் வாழ்வைப்

   புரட்டிப் போடுது !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக