காலம் சுத்துற வேகம் பாரு
கண்ணுக்கு முன்னாலே !
கடந்து வந்த பாதை பாரு
சொல்லுக்கு பின்னாலே !
உலகஞ் சுத்துறச் சுத்துல தானே
உளறுந் தத்துவம் புரியும் ;
கலகம், குழப்பம் வந்தா தானே
வாழும் வாழ்க்கைத் தெளியும் !
சிங்கம், புலியும் சிரிச்சிப் பழகிக்
கவிழ்த்து விடாது ;
பங்குக் கேட்டு நைசாப் பேசிக்
கழட்டி விடாது ;
பொங்கும் பாசம் நேசம் ஊட்டித்
தெருவில் விடாது ;
திங்குஞ் சோத்தில் விஷத்தை வைச்சித்
தீர்த்துக் கட்டாது !
காத்தும் மழையும் வெயிலும் அடிக்கக்
காசுக் கேக்கலையே ;
காயும் பழமும் பயிரும் விளைய
' மாமூல்' கேக்கலையே ;
பூவு சிந்துந் தேனுக் கெங்க
வட்டிக் கேக்குது ;
புரிஞ்சிக் கிட்டா மனுசன் தேறப்
புத்தி கிடைக்குது !
ஓடும் ஆறும் நீரும் பெருகி
உசிரக் காக்குது ;
உறைஞ்சி போன மறுத்த மனசு
ஊரைக் கெடுக்குது ;
பாடு படற எண்ணங் கூடப்
பறந்து போனது ;
பார்த்த காலம் மனுசன் வாழ்வைப்
புரட்டிப் போடுது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக