இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

மழை

 மழை !


மழையே மழையே - நீ எங்கே ? மறந்துப் போனாய் - வர இங்கே ?            (மழை)


கரையைச் சேரும் நுரையெங்கே ? நுரையில் பொங்கும் சுழலெங்கே ? சுழலில் துள்ளும் மீனெங்கே ? நீர்இருந் தால்தான் இவைஇங்கே !     ( மழை ) - 1


பச்சைப் பசுமை பயிரெங்கே ? பயிர்கள் தருகிற விளைச்சலெங்கே ? விளையா திருந்தால் உயிர்களெங்கே ? நீர்இருந் தால்தான் இவைஇங்கே !    ( மழை ) - 2


புலிகள் யானைகள் நீர்த்தேடும் ; குடிக்க வழியின்றி ஊர்த்தேடும் ; ஊரே மிரண்டு அரண்டோடும் ; நீர்இருந் தாலிவை மாறிவிடும் !     ( மழை ) - 3


மரங்கள் வெட்டியப் பெருங்கோபம் மனத்தில் ஆறாக் காயங்களா ? மறுபடி மரங்கள் நாட்டிடுவோம் மாறாக் காயம் ஆறாதா ?      ( மழை ) - 4


மழையே மழையே வா ! வா ! வா ! மண்ணுயிர்க் காக்க வா ! வா ! வா ! மறுத லிக்காமல் மனமிறங்கு மக்கள் வாழப் பொழிந்துவிடு !  ( மழை ) - 5


பொறிஞர் இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக