இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

எங்கள் தோட்டம்

கொடுயேறிப்  பந்தலிலே  படர்ந்தே  தொங்கிக்
               கொத்துகிற  நாகமென  புடலங்  காய்கள்
பொடிக்கல்லைக்  கட்டிவிட்டு  நீட்ட  மாக
               புவியினையே  தொடும்படியாய்  வளர்தல்  செய்வர் ;
பிடியற்றுக்  கொடிபடரும்  பரங்கிக்  காய்கள் ,
               பெரும்பானைப்  பூசுணைக்காய்,  சுரையின்  காய்கள் ,
மடிநிறைய  காய்க்கின்ற  அவரைக்  காய்கள் ,
               மரங்குலுங்குக்  காய்க்கின்ற  முருங்கைக்  காய்கள் !


வெண்டைக்காய்  கத்தரிக்காய்  செடியின் காய்கள் ,
               விரும்புசுவைக்  கூட்டுகிற  பீர்க்கங்  காய்கள் ,
சுண்டைக்காய்  வாழைக்காய்  புளிமாங்  காய்கள் ,
               சுவையூட்டும்  தக்காளி வகைகள்  காய்க்கும் ;
தொண்டைவரைக்  கசப்பிருக்கும்  பாகற்  காய்கள் ,
               துவர்ப்போடே  புளிக்கின்ற  நெல்லிக்  காய்கள் ,
கண்டபடி  விளைந்திங்கே  மகசூல்  காணும்
               காய்கறிகள்  வளர்தோட்டம்  எங்கள் தோட்டம் !
                                                                                                                      -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக