இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

துளிப்பா - 25

வாளித் தண்ணீரைத்
துழவுகிறது 
நிலவு




நா சப்பு கொட்டுகிறது
தேனீயின்
உழைப்பு




கானல் நீரைக்குடித்தே
பசியாறுகிறது
வெயில்




நகம் கடிக்க
பிரசவிக்கின்றன
பிறைநிலாக்கள்




விழுது ஊஞ்சல்
நினைவுகள்
சிறகடிப்பு
                                             -இராதே

துளிப்பா - 24

பல்லாங்குழி
ஆடுங் காற்று
புல்லாங்குழல்




வேலியில்
கதக்களி
ஓணான்





அடைபடுகிறது காவிரி 
காகம்
எங்கே ?



கரை படிந்த காலடிகள்
துடைக்கும்
அலைகள்





சாதிய நெடி
தொடர் தும்மல்
ஆணவக் கொலைகள்

                                                 -இராதே






துளிப்பா - 23

கர்நாடகா ஆடும்
கண்ணாம்பூச்சி
காவிரி



பாறையை அறைந்த
பெருமிதத்துடன் திரும்பும்
அலைகள்



சல்லடையில்
அள்ளும் தண்ணீர்
பனிக்கட்டி ?




நடமாடும்
மலர்க் கண்காட்சி
மகளிர் கல்லூரி




ஓட்டைகளில்
ஒழுகுகிறது இசை
நாதசுரம்

                                           -இராதே





துளிப்பா - 22

சுவடிக்குள்
மயிலிறகு
வாழ்க்கை






ஓடுகிறது வாழ்க்கை
துரத்தும் சிக்கல்களுக்கு
கால் வலிக்கவில்லை




எண்ணத்தை
மேய்ந்து கொண்டிருக்கிறது
கவலை





சுழன்றே
தேய்கிறது
நிலவு




மழைவருது ! மழைவருது !
குடுகுடுப்புக்காரன்
தும்பி

                                                          -இராதே
















துளிப்பா - 21

கிறுக்கும் போதும்
பெயரெழுதும்
தூவல்



அயலக கடைகளில்
ஆலும் வேலும்
''கார்ப்பரேட்'' தந்திரம்



புறா
சமைத்து பரிமாறப்படுகிறது
சமாதானம்



வணிக மையம்
காவி மையம்
கல்வி மைய்யம்



இலைகள் நடனம்
இசைக்கிறது
காற்று
                                                     -இராதே

துளிப்பா -20

தேய்ந்து கொண்டே
வளர்கிறது
நிலா



பூடகம்
நாடகம்
ஊடகம்



சிந்திக்கொண்டே
வழியமைக்கிறது
நீர்



சோம்பல் முறிக்கிறது
வானம்
இடி



நடைக்கேற்றபடி
இசையமைக்கிறது
கொலுசு
                                           -இராதே

துளிப்பா - 19

ஒளிந்தாடும் நிலா
அசைகிறது
தென்னங்கீற்று


கூர்த்தீட்டிய வாள்
மழுங்குகிறது
அறிவு


குனிந்த தலை
நிமிரவில்லை
பெண்மை


இடை தேடி
இடர்படுகிறது
தென்றல்


நனைந்தே கிடந்தும்
சுடுகிறது
நா

                                        -இராதே