இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

குறும்பா - 5

தளராதே    தமிழ்மொழியின்    பேச்சு

தாளமிடும்    சந்தத்தின்    வீச்சு

          நாளைவென்று   கணிணிகண்டு

          ஞாலமுள்ள    நாள்வரையில்

 மாளாது     செந்தமிழின்     மூச்சு



திரைத்துறையில்    ஆபாசச்    செத்தை

திரையிட்டு    நாறவைக்கும்    சொத்தை

          மறைப்பொருளை    வெளிகொணர்ந்து

          மடிநிறையப்    பணஞ்சேர்க்கக்

கறைபடிந்த    கள்ளர்களின்    வித்தை



அரசியலில்    இனியுண்டா     வாய்மை ?

அரங்கேறி    நடிக்கிறதே    பொய்மை

          குரங்குக்கை    மாலைபோல

          குதித்தாடும்    அவலத்தை

விரட்டிவிட்டால்    அடைந்துவிடும்    தூய்மை



ஆறுகளில்    மணலள்ளிக்    கொள்ளை

ஆறுவழி    மாறியதால்    தொல்லை

          ஊறுசெய்யும்    மனிதர்கள்

          ஊருணியை    ஒழிப்பதனால்

சீறுமியற்    கைதாண்டும்    எல்லை
                                                                                    - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக