இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நெஞ்சில் எரியும் நெருப்பு - வெண்பா

வஞ்சி   கருவாய்   வயிற்றில்   வளர்ந்தாலே
பிஞ்சு   நிலையில்   பிளக்கின்றார் - வஞ்சக
நெஞ்சத்தார்   செய்கை   நினைத்தாலே   என்றுமே
நெஞ்சில்   எரியும்   நெருப்பு


அடைமழை   கொட்டும் !   அணைகள்   நிரம்பும் !
கடைமடையில்   கண்ணீர்க்   கவலை - எடைபோடும்
தஞ்சை   உழவர்   தவிக்கும்   நிலையெண்ணின்
நெஞ்சில்   எரியும்   நெருப்பு


வஞ்சியர்   பங்கினை   வாங்கித்   தராமலே
வஞ்சகம்   செய்திடும்   வாதிகளே - பஞ்சணைக்கோ
கொஞ்சிக்   குலாவக்   குமரிதேவை ?   எண்ணுகையில்
நெஞ்சில்   எரியும்   நெருப்பு


அன்னைத்   தமிழை   அழிக்க   நினைத்திடும்
சின்ன   மனத்தோர்   செயல்களோ - கன்னமிடும்
வஞ்சகக்   கள்ளர்களின்   வஞ்சிக்கும்   செய்கையென
நெஞ்சில்   எரியும்   நெருப்பு

                                                                                                               -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக