இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நம்பிக்கை !

வாழ்க்கை  மண்டலத்தின்

மன  சலனத்தில்

இருண்டு  திரண்ட

கருத்துப்  பொழிவுகளின்

தேக்கத்தில்  வழிகிறது

கசந்த  நிகழ்வுகள்

மழை  காலமற்ற

மழையாய்

மீட்கவும்  முடியாமல்

நீக்கவும்  முடியாது

நெடுநேரம்  ஓடும்

கால  வெள்ளத்தில்

மிதந்து  மீள்கிறது

நட்பு

வெள்ளேந்தியாய்

எட்டிப்  பார்க்கும்

நினைவுகள்

சூழ்நிலைக்  கம்பளியில்

சுருண்டு  கனகனப்பில்

புரள்கிறது  இதமாய்

வானம்  வெளுக்காதா ?

போர்வையைத்  தள்ளி

தலை  நீட்டுகிறது

நம்பிக்கை !

                                 -இராதே
                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக