இராதே

இராதே
eradevadassou

வியாழன், 24 டிசம்பர், 2015

கத்தரிக்காய்

உண்ணச்  சுவைக்கும்  காய்தான் ;
     உருண்டு  திரண்ட  காய்தான் ;
எண்ணெய்க்  கொழுப்பை  நீக்கி
     இதயம்  காக்கும்  காய்தான் ;
மண்டைக்  கவசம்  போட்டு
     மலைக்க  வைக்கும்  காய்தான் ;
கொண்டைக்  காம்பை  நீட்டும்
    குண்டு  கத்தரிக்  காய்தான் !


நரம்பு  நோயைப்  போக்கும் ;
     நாளும்  இளமை  காக்கும் ;
வரம்பு  மீறும்  புற்றை
     வாகாய்த்  தீர்த்து  கட்டும் ;
சிரங்கும்  அரிப்பும்  தோன்றின்
    சீண்டிப்  பார்க்கும்  காய்தான் ;
அரசன்  வேடம்  பூணும்
     அழகு  கத்தரிக்  காய்தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக