இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஊசிட்டேரி

வெள்ளம்பாயும்  ஊசிட்  டேரி !  வண்ண  வாரி !
அதில்  பயனுறுதாம்  புதுச்  சேரி ! - மின்னும்

விளக் காகியே  ஓளியே  சுடர்
விழிமேவிய  வணிதாவணி
வீசும்புகழ்  அலங்  காரி ! - ஊசி
விருப்பத்தில்  அமைத்திட்ட  ஏரி!

அலையுஞ்  சுழலுங்  கண்டு
வளையில்  நுழையும்  நண்டு
அருமைநடனங்  காணல்  ஈர்க்குமே ! - மீனும்
கரைத்  துள்ளும்  அழகினை  வார்க்குமே! - ஆசை
ஆட்டுமே !  ஓசை  கூட்டுமே !
எழிற்  ஊட்டுமே ! இசை  மீட்டுமே ! - நிதம்
மனதில்  உழலும்  துன்பம்  ஓட்டுமே ! - மக்கள்
மனதில்  மகிழும்  இன்பம்  பூட்டுமே !

கெண்டை  மீனும்  நாணும்
கண்டே  ஊடல்  காணும்
வண்டு  சேரும்  அல்லிக்  கூட்டமே ! - செயற்
கண்டு  மலர்த்தேன்  ஈட்டமே ! - தமிழ்ச்
சிந்து  பாடி  அலை  வந்துமோதிக்  கரை
கண்டு  ஆடும்மலர்த்  தோட்டமே ! - இந்த
விந்தைதான்  காணநல்  நாட்டமே !

இயற்கையின்  கொடையோ ? - இல்லை
செயற்கையின்  கொடையோ ? - இந்த
எழில்நீர்  நிலை
புவியின்  மிசை  வழியும்பொழில்
                                   அசையுங்  கடல்தானோ ?
ஏங்கும்  புட்  களமோ ? - மழை
தேங்கும்  நீர்  வளமோ ? - வாங்கும்
ஏரியின்  முந்தும்  மாதிரி - நீர்
சேர  தேடிட  ஓடிடக்
கூடுங்  கடலோ ? எழிற்நீரின்  கிடங்கோ ?
                                     எண்ணில்லாத  மடங்கோ ?
வான்தரு  பொன்னோ ?  மகிழும்  இயற்கை
                                                  நமக்குத்  தந்ததுவோ ?
                                                                                                                 -இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக