இராதே

இராதே
eradevadassou

வியாழன், 24 டிசம்பர், 2015

தோழர் நல்லகண்ணு பிள்ளைத்தமிழ் - சிறுத்தேர் பருவம்

பயிரின்  செழிப்போ  ஒருபுரட்சி
               பசுமை  புரட்சி  என்பார்கள் ;
     பாலின்  மிகையோ  ஒருபுரட்சி
               பால்வெண்  புரட்சி  என்பார்கள் ;


உயிரைக்  கொடுக்கும்  ஈகையினை
               ஓடுங்  குருதி  தன்னோடே
     ஓங்கும்  மக்கள்  நலன்காக்க
               உழைக்கும்  புரட்சி  மாபுரட்சி !


கயிற்றை  முறுக்கி  திரித்ததுபோல்
               களத்தில் இணைந்தே போராடிக்
     கண்ணாம்  மாந்தர்  உரிமையினைக்
               காணும்  புரட்சி  செம்புரட்சி !


உயிரை  ஈணும்  புரட்சியிலே
               உணர்வாய்ப்  பொதுமை  சிந்தையுடன்
     ஒழுகும்  ஒளியே !   நல்லகண்ணே !
              உருளத்  தடந்தேர்  உருட்டுகவே !

                                                                                     -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக