இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

துளிப்பா - 25

வாளித் தண்ணீரைத்
துழவுகிறது 
நிலவு




நா சப்பு கொட்டுகிறது
தேனீயின்
உழைப்பு




கானல் நீரைக்குடித்தே
பசியாறுகிறது
வெயில்




நகம் கடிக்க
பிரசவிக்கின்றன
பிறைநிலாக்கள்




விழுது ஊஞ்சல்
நினைவுகள்
சிறகடிப்பு
                                             -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக