இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

எழிற்காட்சி

இறங்கும்  முகிலினங்கள்  படியெனவே
         
          இயங்கும்  பனிப்படர்வின்  மலைமுகட்டின்

உறங்கும்  பனியுறங்கும்  பனியுருகும்
         
          உரசுங்  குளிருரசும்  உடல்சிலிர்க்கும்

கிறங்கும்  மனஞ்சுவைக்கும்  கதகதப்பில்
         
          கிளரும்  எழிலுலவும்  விழிநடைமுன்

நிறங்கள்  ஒளிவீசி  மிளிர்ந்தோடி
         
          நிரலாய்  மணிப்பரலாய்  விழுமருவி




குருகும்  குயிலினங்கள்  முனகிடுமே

          குலாவும்  மயிலினங்கள்  அகவிடுமே

சருகும் நடையொலியில்  இசைசேர்க்கும்

          சரியும்  மணற்றுகலும்  சலசலக்கும்

பெருகும்  மலையருவி  முழவிடுமே

          பிசகா  இசைமழையைப்  பொழிந்திடுமே

இருகும்  மனநிலையும்  தளர்ந்திடுமே

          இசையின்  வளநலங்கள்  உளந்தொடுமே !

                                                                                                       - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக