இராதே

இராதே
eradevadassou

திங்கள், 31 அக்டோபர், 2016

துளிப்பா - 44

பிள்ளையார் தொப்புளில்
பிணத்தின் நெற்றியில்
ஒற்றை நாணயம்



குடைக்குள்
தவளை
காளான்



வானிலை
தோகை விரிக்கிறது
மயில்



குறுக்கே போகிறான்
குழப்பத்தில்
பூனை



பீட்சா , பர்கர்
காணாமல் போகுது
அடை , வடை

                                                    - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக