இராதே

இராதே
eradevadassou

வியாழன், 28 நவம்பர், 2024

மாமழை வாழி


 உருப்படி


             மாமழை வாழி !


                   எடுப்பு


மாமழை வாழியவே வான்பொழிப் பைம்புனல்

மாமழை வாழியவே              ( மாமழை )


                   தொடுப்பு


 மாமலை மீதினில் ஆடிடுங் கார்முகில்

மருவிய அருவியாய் வீழ நிலம்புகு                              ( மாமழை )


                      முடிப்பு


ஆயிரம் ஆயிரம் நீர்வழி யாவையும்

ஆறுகள் வீறுடன் நீர்நிலைத் தேக்கிப் 

பாயும் நிலம்வெளிக் காடுகள் தேற்றி

ஓயா விளைச்சலை ஓங்கவே வார்க்கும்  ( மாமழை )


மண்ணில் தவழ்ந்து மண்ணுள் நுழைந்து

மண்ணடி நீர்வளம் மேவ செழித்து

மக்கள் பருகிட நலந்தரு அமுதென

மாண்பை யளித்தே உலகினைக் காக்கும்    ( மாமழை )


சூழ்யியல் போற்றவும்  உயிரிகள் பெருகவும்

சூழும் இயற்கை தரவுகள் மீட்கவும்

வாழ்நிலை உயர்த்தவும் வறுமையைப் போக்கவும்

வான்தருங் கொடையென 'உயிர்த்துளி' யருள்கிற      ( மாமழை )


                           - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக