இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 29 நவம்பர், 2024

அலையும் இசையும்

 "அலையும் இசையும்"


தித்தித் தை தை தை

   அழைத்ததே அலை !

தித்தித் தோம் தோம் தோம்

   தெறித்ததே இசை ! ( தித்தித் தை )


அலையழகா ? நுரையழகா ?

   அலைஓதும் இசையழகா ?

வளையருளும் சங்கினங்கள்

   வந்தொதுங்கும் கரையழகா ?

நிலையில்லா ஆட்டத்தில்

   நின்றாடும் படகழகா ?

வலைசேரும் நண்டுகளின்

   வண்ணநடை சீரழகா ?


          அழகிய லுலவிடுங் கடற்கரை பொழிகிற

             அசைவுக ளெழுதிய நினைவுகள் வலம்வர

          பழகிய மொழிதனில் கவிதைகள் துளிர்விட

             பறபற பறவென இதயமே சிறகிட


சிந்தின சிந்தின செந்தமிழே !

சிந்தையில் வந்தன பைந்தமிழே !

சிந்தின சிந்தின செந்தமிழே !

சிந்தையில் வந்தன பைந்தமிழே !

வந்தனம் கூறிய

முந்திய சந்தத்தில்


தித்தித் தை தை தை

   அழைத்ததே அலை !

தித்தித் தோம் தோம் தோம்

   தெறித்ததே இசை ! ( தித்தித் தை )


                - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக