"அலையும் இசையும்"
தித்தித் தை தை தை
அழைத்ததே அலை !
தித்தித் தோம் தோம் தோம்
தெறித்ததே இசை ! ( தித்தித் தை )
அலையழகா ? நுரையழகா ?
அலைஓதும் இசையழகா ?
வளையருளும் சங்கினங்கள்
வந்தொதுங்கும் கரையழகா ?
நிலையில்லா ஆட்டத்தில்
நின்றாடும் படகழகா ?
வலைசேரும் நண்டுகளின்
வண்ணநடை சீரழகா ?
அழகிய லுலவிடுங் கடற்கரை பொழிகிற
அசைவுக ளெழுதிய நினைவுகள் வலம்வர
பழகிய மொழிதனில் கவிதைகள் துளிர்விட
பறபற பறவென இதயமே சிறகிட
சிந்தின சிந்தின செந்தமிழே !
சிந்தையில் வந்தன பைந்தமிழே !
சிந்தின சிந்தின செந்தமிழே !
சிந்தையில் வந்தன பைந்தமிழே !
வந்தனம் கூறிய
முந்திய சந்தத்தில்
தித்தித் தை தை தை
அழைத்ததே அலை !
தித்தித் தோம் தோம் தோம்
தெறித்ததே இசை ! ( தித்தித் தை )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக