உருப்படி
வெண்சங்கே ஊது !
எடுப்பு
சங்கே ஊதூது ! - வெண்
சங்கே ஊதூது !
தொடுப்பு
எங்கும் இன்பம் தங்கும் என்றே - நம்பும்
எல்லோர் நினைவும் 'சள்ளை' என்றே (சங்கே )
முடிப்பு
தூங்கும் நள்ளிரவில் - உயர்
வெள்ளம் புகுந்தே
இல்லம் நிறைத்தே
உள்ளம் வருத்தியதே !
தேங்கிய செந்நீரும் - எம்
உடைமை சிதைத்தே
கெடுமை கொடுத்தே
கொடுமை நிகழ்த்தியதே !
தாங்கும் மனநிலையும் - துயர்
மெல்லத் துருத்தி
கள்ளம் வகுத்தே
அல்லல் படுத்தியதே !
ஓங்கும் வலிகளிலும் - வினை
மிஞ்ச நகைத்தே
நெஞ்சம் வதைத்தே
வஞ்சம் செய்ததென ( சங்கே )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக