இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

 


என்னை எழுதும் எழுதும் என்றே
மாமழை குதிக்குதே !
எந்தன் அழகை வரைக என்றே
மாக்கடல் துடிக்குதே !
முன்னும் பின்னும் எழுலு ணர்த்தி
இயற்கைவட்டம் சுழலுதே !
முந்து கின்ற முகிலி னங்கள்
முகமினிட்டே உழலுதே !
மின்னும் மின்னல் இடிய னுப்பித்
தன்னைப்பாட அழைக்குதே !
மேனித் தீண்டுங் குளிரின் காற்று
தன்விளக்கம் நுழைக்குதே !
வண்ண நிலவு முகமி னுக்கி
வண்ணம்பாட கெஞ்சுதே !
வான வில்லோ வடிவங் காட்டி
உரைக்குமாறு கொஞ்சுதே !
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக