இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 8 ஜூலை, 2012

நிலாதவம்

அடிக்கடி நீ

மலைப் பிரேதசங்களில்

வலம் வராதே

உன்

தொடு உணர்வில் கூச்சப்பட்டு

நெளிந்து குலுங்கியதில்

நிலச்சரிவு  !




உன்

பார்வைப்பட்டதும் இளக

தொடங்குகின்றன

பாறைகள்

உன்

பாதம்பட்டால்.  . . .

அழத்தொடங்கிவிடும்

அருவியாய்  !




பாதையில்

கிடக்கும் முட்களுக்கு

உன்

பாதம் குத்தியதில்

மோட்சம் கிடைக்கிறது !

இரத்தத் துளிகளால்

சுத்தமாகிறது !




கோபத்தில்

என் உதடுகள்

முட்களைச்சபிக்கின்றன

அவள்

சரிந்ததில்

மனசு தருகிறது

சாபவிமோசனம்

முட்களுக்கு  !




நீ

தடம்பதித்த பாதைகளில்

காலடிச் சுவடுகளை

நான் வருடிப்பார்க்கிறேன்

என்னை

முட்டித்தள்ளி

முந்தப் பார்க்கிறது

காற்று !




அண்ணாந்து வளரும்

மூங்கில் கூட

உன்னைப் பார்த்தது

அவசரத்தில் குனிந்து

அலோ  என்கின்றது !




ததும்பும் கள்ளுறிஞ்ச

தவம் கிடக்கும்

தேனீக்கள்

உன்

இதழோரம்

வார்த்தைகள் வழிந்ததும்

நகர மறுக்கின்றன

நனைந்த ஈக்களாய் !




மென்மையின் மேன்மையால்

கர்வப்பட்டு

காற்றில் மிதக்கும்

இறகுகள்

உன்னை

உரசியதால்

நாணப்பட்டு

தரையிறங்குகின்றன !




மலைமுகடுகளில்

உன்

வருகையால்

மேகங்களின் கூட்டம்

அலை மோதுகின்றன

உன்

மேனி தழுவி

தங்களின்

மென்மையைத்

தரம் பிரித்துக்கொள்ள !




தோற்ற மேகங்கள்

கூட்டம் கூட்டமாய்

மூட்டம் போட்டு

தேம்புகின்றன

மலைச் சாரலாய்!




போதும் போதும்

உன்

புறப்பாடு

பொழுதிற்கு முன்னே

இறங்கிவிடு

பாவம் நிலா

தற்கொலை முனையில்

தவம் கிடப்பதாய்க்

கேள்வி!

           -இராதே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக