இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 20 ஜூலை, 2012

ஓணான்

கழுத்தை   கழுத்தை   ஆட்டும் ;

கண்கள்   உருட்டி   காட்டும் ;

காக்கும்   வேலிகள்   மீதே

களிக்கும்   நடனம்   புரியும்  !



இயல்பாய்   நாக்கை   நீட்டும் ;

ஈக்களை   உண்ண   சுழற்றும் ;

இனத்தைப்   பெருக்க   வேண்டி

ஈன்றே   முட்டைகள்   பொரிக்கும்  !



குச்சியில்   சுருக்கு  செய்து

குறியாய்   நேரம்   பார்த்து

கூர்ந்து   நின்று   பிடித்தே

கூறுப்   போட்டு   வதைப்பர்  !



இன்னுயிர்   கொல்லுதல்   மடமை ;

இயற்கையை   மதிப்பது   கடமை ;

இதனைத்   தலைமேற்   கொண்டே

இயங்கும்   உலகை   காப்போம்  !

                                                           -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக