இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 15 ஜூலை, 2012

தூசி

என்னைத்   தெரிகிறதா  ?

நான்   யாரெனப்   புரிகிறதா  ?

மண்ணில்   இருந்தெழுவேன் ;

விண்ணிலும்   நிறைந்திருப்பேன்  !



திண்ணைத்   தெருக்களில்

படிந்திருப்பேன் ;

தினம்வீசிடும்   காற்றிடைக்

கலந்திருப்பேன் ;

கண்ணைக்   கசக்கி

அழவைப்பேன் ;

கண்ணீரை   ஆறாய்

வரவழைப்பேன்  !



நாசிக்குள்   நாசுக்காய்

நுழைந்திடுவேன் ;

நுரை யீரலகத்தின்

தன்மைக்   கெடுப்பேன் ;

நாளெல்லாம்   குடைச்சல்

நின்று   தருவேன் ;

''நச்''   செனத்   தும்மலாய்

மாறிவருவேன்  !



சுதந்தரமாய்   நோய்களைப்

பரப்பிவிடுவேன் ;

சுகமின்றி   மக்களைச்

சுற்றவிடுவேன் ;

சூழ்ச்சியால்   சுற்றுச்சூழல்

நலனழிப்பேன் ;

சுத்தத்திற்கு   முன்னின்று

கதவடைப்பேன்  !



ஒவ்வோர்    இடந்தனிலும்

ஒளிந்து   புகுவேன் ;

ஓசையின்றி   மெதுவாய்

பதுங்கியிருப்பேன் ;

ஒருநாளும்   நன்மைதனைச்

செய்வதறியேன் ;

ஓலைத் துடைப்பம்   வத்தாலோ

ஓடிஒழிவேன்  !



தட்டிவிட்டால்   என்னைத்

தாவியெழுவேன் ;

தயங்காமல்   ஒவ்வாமை

உணர்ச்சித்   தருவேன் ;

தாளாத   இம்சைக்கு

வழிவகுப்பேன் ;

தண்ணீர்   கொண்டகற்றினால்

கரைந்து  மறைவேன்  !



சகதியும்   சேறும்தான்

என   பிறப்பிடம் ;

சாக்கடை   குப்பைகள்

தான்   உறைவிடம் ;

சட்டெனப்   பறப்பதால்

நான்   புழுதியானேன் ;

சகலரும்   வெறுக்கின்ற

அவதியானேன்  !

                                 -இராதே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக