காலங் கண்ட பொருள்கள் !
ஆட்டுக் கல்லு ஆடல;
அம்மி கல்லு அறைக்கல ;
போட்டுக் குத்தும் உலக்கையும்
பொடித்துக் கொடுக்கும் உரலையும்
மீட்டெ டுக்க ஆளில்ல
மீண்டும் கொணர வழியில ;
சட்டிப் பானை மண்குடம்
சட்ட செய்ய யாருண்டு ?
கட்டுப் பட்டே உழைத்திட
கடுகு மனமும் விரும்பல ;
முட்டு போடும் சோம்பலில்
முணுகி உலகம் சுருங்குது ;
கெட்டு போகும் பாரிலே
கேடு கெட்ட தன்னலம் ;
குட்டிக் கரணம் போடுது
கொட்ட மடித்தே ஆடுது!
வியந்துப் போற்றும் உழைப்புமே
விழலுக் கிரைத்த நீரதாய்ப்
பயன்க ளற்றுப் போனது ;
பாழும் நோயும் சூழுது ;
கயமை பூண்ட உளத்தினால்
காலங் கண்ட பொருள்களும்
பயனி லாது மறையுது
பண்பும் மரபும் மாளுது !
- இராதே
14.09.2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக