இராதே

இராதே
eradevadassou

புதன், 8 ஜனவரி, 2025

காலங்கண்ட பொருள்கள்

 காலங் கண்ட பொருள்கள் !


ஆட்டுக் கல்லு ஆடல;

   அம்மி  கல்லு அறைக்கல ;

போட்டுக் குத்தும் உலக்கையும்

   பொடித்துக் கொடுக்கும் உரலையும்

மீட்டெ டுக்க ஆளில்ல

   மீண்டும் கொணர வழியில ;

சட்டிப் பானை மண்குடம்

   சட்ட செய்ய யாருண்டு ?


கட்டுப் பட்டே உழைத்திட

   கடுகு மனமும் விரும்பல ;

முட்டு போடும் சோம்பலில்

   முணுகி உலகம் சுருங்குது ;

கெட்டு போகும் பாரிலே

    கேடு கெட்ட தன்னலம் ;

குட்டிக் கரணம் போடுது

   கொட்ட மடித்தே ஆடுது!


வியந்துப் போற்றும் உழைப்புமே

   விழலுக் கிரைத்த நீரதாய்ப்

பயன்க ளற்றுப் போனது ;

   பாழும் நோயும் சூழுது ;

கயமை பூண்ட உளத்தினால்

   காலங் கண்ட பொருள்களும்

 பயனி லாது மறையுது

   பண்பும் மரபும் மாளுது !


                    - இராதே

                     14.09.2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக