இராதே

இராதே
eradevadassou

சனி, 16 நவம்பர், 2013

கொழுக்கட்டை

வெல்லப்  பாகு  காய்ச்சனும் ;
          வெள்ளைத் தேங்காய்த்  துருவனும் ;
மெல்ல  கலந்து  இரண்டையும்
          மெதுவாய்  உருண்டைச்  செய்யனும் ;
நல்ல  அரிசி  மாவினை
          நன்றாய்  அவித்து  பிசையனும் ;
வில்லை  வில்லை  யாகவே
          வெள்ளை  மாவைத்  தட்டனும் !


உள்ளே  இனிப்பின்  உருண்டையை
           உருட்டி  மடித்தே  அவிக்கனும் ;
வெள்ளை  ஆவி  சட்டியில்
          வெந்து  கிடைக்கும்  கொழுக்கட்டை ;
பிள்ளை  யாரு  சாமிக்கு
          பிடித்த  உணவு  கொழுக்கட்டை ;
பிள்ளைச்  செல்வம்  நீங்களும்
          பிகு பண்  ணாமல்  உண்ணுங்கள் !
                                                                                         -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக