இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 5 ஜனவரி, 2018

கஜல் கவிதைகள் - 1

கூந்தலில் சொட்டின நீர்த்துளிகள்
ஏந்திடும் நம்காதலின் தேன்துளிகள்
****
கடித்துத் துப்பினாய் நகங்களோ பிறைநிலாக்கள்
துடிக்கும் காதலின் மிசைநுழை மனஉலாக்கள்
****
குதிகால் நடுவமாய்க் கட்டைவிரலில் வரைகிறாய்
புதியவரைகலை காதல் பிறைவிட்டம்
****
பறிக்கும் மலர்களோ உன்விரலால் கூச்சப்படுகிறது
பரவசக் காதலில் மோட்சம்பெறுகிறது
****
கசிந்துருகி கண்ணீர்மல்க மனமேறும் காதல்
பிசின்போல் ஒட்டி பிரிய மறுக்கிறது
****
சிமிட்டும் விழிகளில் சீறும் காதலலைகள்
சிட்டிகை நொடியில் மனநுழைந்து மௌனிக்கின்றன
****
கொலுசுகள் காதல்ஜதி சொல்லிக் களிக்கின்றன
இளசுகள் மனந்தவழ்ந்து துளிர்க்கின்றன
****
இடைஇடையே நெளிந்தாலும் காதல்
இடமறிந்து நழுவுகிறது பிரியாமலே
                                                                    
                                                                                                      - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக