இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 5 ஜனவரி, 2018

கஜல் கவிதைகள் - 2


ஆழ்மனக் கனவுகள் மெய்ப்பட வருமோ ?
வராதெனின் உறக்கந்தான் பொய்யெனத் தகுமோ ?

எந்நினைவு மனக்குகைக்குள் எவ்வழியில் புகுமோ ?
எந்நாளும் கருத்தெண்ணித் தத்தளிப்பில் விடுமோ ?

கருத்தில்லாக் கனவுகளே கற்பனையின் தொடக்கம்
விரிவான வெளிச்சங்கள் விடைதேடி முடக்கம்

குழப்பத்தில் கவலைகளின் குட்டிகள்தாம் திரியும்
குறைதீர மௌனங்கள் சான்றுகளாய் விரியும்

விண்மீன்கள் சுடர்விட்டு விளக்கொளியைப் பொழியும்
விடைபெறுமா இரவுகள்? விடைதருமா கனவுகள் ?


                                                                                                     - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக