இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 19 ஜனவரி, 2018

வெறுமை

அடிவானத்தை
வருடியபடியே
மேல்நோக்கிப் படரும்
பார்வை
நிலவொளியின்
பொழிதலில்
மூழ்கித் தவிக்கும்
நினைவுகள்
உருண்டு வந்து
உலர்க்கோடுகளாய்க்
கண்ணீர்ப் பயணத்தின்
பாதை
உதடுகள் நனைத்த
கரித்த உவர்ப்புச்
சுவை
ஆரவாரமும்
அசைவுமின்றி
கவனித்தபடி
தன் இருத்தலைப்
பதிகிறது
வெறுமை
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக