இராதே

இராதே
eradevadassou

சனி, 6 ஜனவரி, 2018

புழு

இலைகளைக் கடித்து
உண்டபடி
ஊர்ந்துகொண்டிருந்தது
பணமதிப்பிழப்பால்
வங்கி வாசலில்
தவங்கிடக்க வில்லை
GST வரி செலுத்த வேண்டுமெனப்
புலம்பிப் புலம்பி
அழவுமில்லை
மாட்டிறைச்சி உண்டால்
மரணிப்போம் என்ற
அச்சமுமில்லை
கருப்புப் பணபங்கு
வங்கிக் கணக்கில்
விழுமா ? விழாதா ?
கவலையுமில்லை
அமைதியாக
இலைகள் தேடி
ஊர்ந்துகொண்டே
பயணித்தது புழு
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக